இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

பாகிஸ்தான் தொடர் ரத்தாகுமா?: மேலும் மூன்று மே.இ. தீவுகள் வீரர்களுக்கு கரோனா பாதிப்பு

மே.இ. தீவுகள் அணியைச் சேர்ந்த மேலும் 5 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால்...

News image

மே.இ. தீவுகள் அணி

Updated On :16 டிசம்பர் 2021, 6:10 am

DIN

மேற்கிந்தியத் தீவுகள் அணி, பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. அனைத்து ஆட்டங்களும் கராச்சியில் நடைபெறுகின்றன. முதல் இரு டி20 ஆட்டங்களை வென்று டி20 தொடரைக் கைப்பற்றியுள்ளது பாகிஸ்தான் அணி. 3-வது டி20 ஆட்டம் இன்று நடைபெறுகிறது. 

மே.இ. தீவுகள் அணியைச் சேர்ந்த ஷெல்டன் காட்ரெல், ராஸ்டன் சேஸ், கைல் மையர்ஸ் ஆகிய 3 வீரர்கள் ஏற்கெனவே கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 வீரர்கள் உள்பட 5 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஷாய் ஹோப், அகேல் ஹுசைன், ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆகிய மூன்று மே.இ. தீவுகள் வீரர்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அவர்களால் இந்தச் சுற்றுப்பயணத்தின் மீதமுள்ள ஆட்டங்களில் விளையாட முடியாது. 

ஏற்கெனவே 3 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மே.இ. தீவுகள் அணியைச் சேர்ந்த மேலும் 5 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் மீதமுள்ள ஆட்டங்கள் நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. பாகிஸ்தான், மே.இ. தீவுகள் அணிகளின் கிரிக்கெட் நிர்வாகிகள் இன்று இதுபற்றி பேசி முடிவெடுக்கவுள்ளார்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.