சேப்பாக்கம் மைதானத்தில் கோலி, ரோஹித், அஸ்வின்: பயிற்சியில் இந்திய அணி
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இந்திய வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் திங்கள்கிழமை மாலை பயிற்சியில் ஈடுபட்டனர்.


இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இந்திய வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் திங்கள்கிழமை மாலை பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் பிப்ரவரி 5-ம் தேதி தொடங்குகிறது. இதில் விளையாடுவதற்கான இரு அணி வீரர்களும் கடந்த 6 நாள்களாக தனிமையில் இருந்தனர். இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் யாருக்கும் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை.
இதைத் தொடர்ந்து, இந்திய வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர். வீரர்கள் மைதானத்தில் இருக்கும் புகைப்படங்களை பிசிசிஐ சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...