ஆஸி. ஓபன்: இறுதிச்சுற்றில் ஒசாகா - பிராடி மோதல்!

ஆஸி. ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் ஒசாகாவும் ஜெனிஃபர் பிராடியும் மோதவுள்ளார். 
ஜெனிஃபா் பிராடி
ஜெனிஃபா் பிராடி

ஆஸி. ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் ஒசாகாவும் ஜெனிஃபர் பிராடியும் மோதவுள்ளார். 

இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரையிறுதிச்சுற்றில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற செரீனா வில்லியம்ஸை எதிர்கொண்டார் உலகின் நெ.3 வீராங்கனையான ஒசாகா. ஒரு மணி நேரம் 15 நிமிடங்களில் 6-3, 6-4 என நேர் செட்களில் செரீனாவை வீழ்த்தி ஆஸி. ஓபன் இறுதிச்சுற்றுக்குள் நுழைந்துள்ளார் ஒசாகா. இதன்மூலம் நான்காவது தடவையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 

மற்றொரு அரையிறுதிச் சுற்றில், அமெரிக்காவின் ஜெனிஃபா் பிராடியும் செக் குடியரசின் கரோலினா முசோவாவும் மோதினார்கள். இதில் ஜெனிஃபர் பிராடி, 6-4, 3-6, 6-4 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் ஜெனிஃபர் பிராடி முதல்முறையாக இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார். 

ஒசாகா
ஒசாகா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com