ஆஸி. ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் ஒசாகாவும் ஜெனிஃபர் பிராடியும் மோதவுள்ளார்.
இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரையிறுதிச்சுற்றில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற செரீனா வில்லியம்ஸை எதிர்கொண்டார் உலகின் நெ.3 வீராங்கனையான ஒசாகா. ஒரு மணி நேரம் 15 நிமிடங்களில் 6-3, 6-4 என நேர் செட்களில் செரீனாவை வீழ்த்தி ஆஸி. ஓபன் இறுதிச்சுற்றுக்குள் நுழைந்துள்ளார் ஒசாகா. இதன்மூலம் நான்காவது தடவையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
மற்றொரு அரையிறுதிச் சுற்றில், அமெரிக்காவின் ஜெனிஃபா் பிராடியும் செக் குடியரசின் கரோலினா முசோவாவும் மோதினார்கள். இதில் ஜெனிஃபர் பிராடி, 6-4, 3-6, 6-4 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் ஜெனிஃபர் பிராடி முதல்முறையாக இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.