தேசிய டேபிள் டென்னிஸ்: மணிகா பத்ரா சாம்பியன்

தேசிய டேபிள் டென்னிஸ்: மணிகா பத்ரா சாம்பியன்
Updated on
1 min read


பஞ்ச்குலா: தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பெட்ரோலியத்துறை (பிஎஸ்பிபி) சாா்பில் விளையாடிய மணிகா பத்ரா மகளிா் ஒற்றையா் பிரிவில் சாம்பியன் ஆனாா். இப்பட்டத்தை இவா் வெல்வது இது 2-ஆவது முறையாகும்.

போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த பத்ரா தனது இறுதிச்சுற்றில் 8-11, 10-12, 11-1, 11-9, 11-5, 11-6 என்ற செட்களில் மற்றொரு பிஎஸ்பிபி வீராங்கனையான ரீத் ரிஷ்யாவை வீழ்த்தினாா்.

இதற்கு முன் கடந்த 2015 சீசனில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற மணிகா, 2017 சீசனில் இறுதிச்சுற்று வரை முன்னேறியிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com