தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

தாய்லாந்து ஓபன்: முதல் சுற்றில் சாய்னா, ஸ்ரீகாந்த் வெற்றி

தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டியில்  இந்தியாவின் சாய்னா நெவால், ஸ்ரீகாந்த் ஆகியோர்  முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

News image
Updated On :13 ஜனவரி 2021, 10:53 pm

DIN

பாங்காக்: தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டியில்  இந்தியாவின் சாய்னா நெவால், ஸ்ரீகாந்த் ஆகியோர்  முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இதில், புதன்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் சாய்னா நெவால் 21-15, 21-15  என்ற நேர் செட்களில் மலேசியாவின் செல்வதுரை கிஷோனாவை வீழ்த்தினார். 
முன்னதாக செவ்வாய்க்கிழமை சாய்னாவுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டது. எனினும் சாய்னா ஏற்கெனவே கரோனாவால்

பாதிக்கப்பட்டிருந்ததால், தனக்கு மீண்டும் கரோனா தொற்று ஏற்பட வாய்ப்பில்லை என புகார் தெரிவித்திருந்தார். 
இதையடுத்து அவருக்கு மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கரோனா தொற்று இல்லை என  உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் விளையாட அனுமதிக்கப்பட்டார். சாய்னா தனது 2-ஆவது சுற்றில் தாய்லாந்தின் புசானன் ஆங்பாம்ரங்கானை எதிர்கொள்கிறார். 
ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின்  ஸ்ரீகாந்த் 21-12, 21-11 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான செüரவ் வர்மாவை வீழ்த்தினார். ஸ்ரீகாந்த் தனது 2-ஆவது சுற்றில் போட்டித் தரவரிசையில் 8-ஆவது இடத்தில் உள்ள மலேசியாவின் ஜி ஜியா லீயை எதிர்கொள்கிறார். ஜி ஜியா லீ தனது முதல் சுற்றில் 13-21, 21-14, 21-8 என்ற செட் கணக்கில்  இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாயை வீழ்த்தினார். 
அதேநேரத்தில் மற்றொரு இந்திய வீரரான காஷ்யப், கனடாவின் ஜேசன் ஆண்டனியை எதிர்த்து விளையாடினார். இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 9-21 என்ற கணக்கில் இழந்த காஷ்யப், அடுத்த செட்டை 21-13 என்ற கணக்கில் கைப்பற்றினார். 
இதையடுத்து நடைபெற்ற வெற்றியைத் தீர்மானிக்கும் 3-ஆவது செட்டில் காஷ்யப் 8-14 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தபோது, காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக போட்டியிலிருந்து விலகினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.