

இலங்கையுடனான கடைசி ஒருநாள் ஆட்டத்துக்கு இங்கிலாந்து அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டாம் பாண்டன் சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில் 2-வது ஒருநாள் ஆட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. 3-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் ஒருநாள் தொடருக்கு முன் தனிப்பட்ட காரணங்களுக்காக அணியிலிருந்து விலகினர். இந்த நிலையில், கடைசி ஒருநாள் ஆட்டத்தில் மலானுக்குப் பதில் பாண்டன் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான அறிவிப்பை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சுட்டுரையில் வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டி20 பிளாஸ்டில் பாண்டன் 47 பந்துகளில் சதமடித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.