விம்பிள்டன்: சானியா - போபண்ணா இணை தோல்வி
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையா் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் சானியா மிா்சா - ரோஹன் போபண்ணா இணை தோல்வியடைந்தது.
நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன், லண்டனில் நடைபெற்று வருகிறது. கலப்பு இரட்டையா் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் சானியா - போபண்ணா இணை, கிளாபாக் - ரோஜர் ஜோடியை எதிர்கொண்டது. இதில் 3-6, 6-3, 9-11 எனக் கடுமையாகப் போராடி தோற்றது இந்திய இணை.
இந்த ஆட்டம் இரு நாள்களாக நடைபெற்றது. செவ்வாய் அன்று முதல் செட்டில் இந்திய இணை தோற்றது. அடுத்த நாள் சானியாவும் போபண்ணாவும் சிறப்பாக விளையாடினார்கள். 2-வது செட்டை வென்று, கடைசி செட்டில் கடுமையாகப் போராடியும் வெல்ல முடியாமல் போனது.
இந்த ஆட்டத்தில் தோற்றதன்மூலம் இந்த வருட விம்பிள்டன் போட்டியில் பங்கேற்ற அனைத்து இந்தியர்களும் தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்கள்.