
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் செக் குடியரசு வீராங்கனை சாம்பியன் பட்டம் வென்றார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் பாரீஸ் நகரில் இன்று நடந்தது. இதில் ரஷியாவின் அனஸ்தேசியா பவ்லியுசென்கோவாவை, செக் குடியரசின் பார்போரா கிரெஜிகோவா எதிர்கொண்டார்.
மிகவும் பரபரப்பான இந்த ஆட்டத்தில் ரஷியாவின் அனஸ்தேசியா பவ்லியுசென்கோவாவை 6-1, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி செக் குடியரசின் பார்போரா கிரெஜிகோவா சாம்பியன் பட்டம் வென்றார்.
இது பார்போரா கிரெஜிகோவா வெல்லும் முதல் கிராண்ஸ்ட்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.