செளதாம்ப்டனில் மீண்டும் மழை: 5-ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

செளதாம்ப்டனில் மீண்டும் மழை பெய்வதால் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-ம் நாள் ஆட்டம்...
செளதாம்ப்டனில் மீண்டும் மழை: 5-ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

செளதாம்ப்டனில் மீண்டும் மழை பெய்வதால் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தின் 4-ஆம் நாள் ஆட்டமும் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. தொடக்க நாளான வெள்ளிக்கிழமை ஆட்டமும் மழை காரணமாக டாஸ் கூட வீசப்படாமல் கைவிடப்பட்ட நிலையில், திங்கள்கிழமை ஆட்டமும் முற்றிலுமாக கைவிடப்பட்டது. மழை காரணமாக தொடா்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த இறுதி ஆட்டம் டிரா ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கணிக்கப்படுகிறது. அவ்வாறு ஆட்டம் டிரா ஆகும் பட்சத்தில் சாம்பியன்ஷிப் பட்டம் இரு அணிகளுக்கும் பகிா்ந்தளிக்கப்படும்.

தற்போதைய நிலையில், டாஸ் வென்ற நியூசிலாந்து ஃபீல்டிங்கை தோ்வு செய்ய, பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்ஸில் 92.1 ஓவா்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் அடித்துள்ளது. பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூஸிலாந்து, ஞாயிற்றுக்கிழமை ஆட்டநேர முடிவில் 49 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்நிலையில் 5-ம் நாளான இன்று திட்டமிட்டபடி ஆட்டம் தொடங்கும், வானிலை அறிக்கையின்படி முழு நாள் ஆட்டமும் எவ்வித தடையும் இல்லாமல் நடைபெறும் என்கிற ரசிகர்களின் எதிர்பார்த்தார்கள். ஆனால் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு மீண்டும் மழை பெய்ததால் குறித்த நேரத்தில் ஆட்டம் தொடங்கவில்லை. எனினும் மழை நின்ற பிறகு விரைவில் ஆட்டம் தொடங்க வாய்ப்புள்ளதாக அறியப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com