கரோனா பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறிய சம்பவம்: மூன்று இலங்கை வீரர்களுக்கு இடைக்காலத் தடை

கரோனா பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறிய காரணத்துக்காக மூன்று இலங்கை வீரர்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கரோனா பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறிய சம்பவம்: மூன்று இலங்கை வீரர்களுக்கு இடைக்காலத் தடை

கரோனா பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறிய காரணத்துக்காக மூன்று இலங்கை வீரர்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது இலங்கை அணி. டி20 தொடரை 3-0 என வென்றுள்ளது இங்கிலாந்து அணி. ஒருநாள் தொடர் நாளை முதல் தொடங்குகிறது.

இந்நிலையில் இலங்கை வீரர்களான நிரோஷன் டிக்வெல்லா, குசால் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலகா ஆகிய மூவரும் கரோனா பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறியுள்ளார்கள். டர்ஹம் சிட்டி செண்டர் என்கிற பொது இடத்தில் மெண்டிஸும் டிக்வெல்லாவும் இருந்த விடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானது. இருவர் கைகளிலும் முகக்கவசம் இருந்தாலும் இருவரும் அதை அணிந்திருக்கவில்லை. சிட்டி செண்டர் பகுதியில் காரில் சென்ற ஒருவர் அவர்களுக்குத் தெரியாமல் விடியோ எடுத்துள்ளார். இவர்களுடன் வெளியேறிய தனுஷ்கா விடியோவில் இடம்பெறவில்லை.

இந்த விடியோ வெளியேறிய பிறகு மூன்று வீரர்களும் கரோனா பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறியது பற்றி விசாரணை நடைபெற்றது. இதில் மூவரும் பாதுகாப்பு வளையத்தை மீறி வெளியே சென்றதை ஒப்புக்கொண்டார்கள். இதையடுத்து மூவருக்கும் இடைக்காலத் தடை விதித்து இங்கிலாந்திலிருந்து வெளியேற்றியுள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம். மூவரும் விமானத்தில் இலங்கைக்குத் திரும்பியுள்ளார்கள்.

டி20 தொடரில் மூவரும் சுமாராக விளையாடினாலும் ஒருநாள் தொடரில் இலங்கை அணியின் முதல் தேர்வாக இருக்கக்கூடியவர்கள். அவிஷ்காவும் காயத்தால் ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளதால் ஒருநாள் தொடரில் சரியான வீரர்களைத் தேர்வு இலங்கை அணி தடுமாறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com