ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் இணைந்து 5,000 ரன்கள் என்ற மைல்கல்லை ஞாயிற்றுக்கிழமை எட்டினர்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து இந்த முறையும் இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் தொடக்கம் முதலே துரிதமாக ரன் சேர்த்து விளையாடினர். இதனால், இந்திய அணியின் ரன் ரேட் ஓவருக்கு 6.5 ரன்களுக்கு மேல் நீடித்து வந்தது. 14 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை எட்டியது இந்திய அணி.
இதன்மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் பாட்னர்ஷிப்பில் 5,000 ரன்கள் என்ற மைல்கல்லை இந்த இணை எட்டியது.
சச்சின் டெண்டுல்கர் மற்றும் சௌரவ் கங்குலிக்கு அடுத்தபடியாக ஒருநாள் கிரிக்கெட்டில் பாட்னர்ஷிப்பில் 5,000 ரன்களை எட்டும் இரண்டாவது இந்திய இணை ரோஹித் - தவான்.