இன்ஸ்டாகிராம் செயலியில் 15 கோடி பின்தொடர்பவர்களை பெற்ற முதல் ஆசிய நபர் எனும் சாதனையைப் படைத்தார் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி.
சமூக வலைத்தளங்களில் விளையாட்டு பிரபலங்கள், திரைக் கலைஞர்கள் உள்ளிட்டவர்கள் தங்களது ரசிகர்களை பிந்தொடர்பவர்களாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட்கோலி இன்ஸ்டாகிராம் செயலியில் 15 கோடி பின்தொடர்பவர்களை பெற்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் இன்ஸ்டாகிராமில் அதிக எண்ணிக்கையிலான பின்தொடர்பவர்களைக் கொண்ட முதல் ஆசிய நபர் எனும் பெருமையை விராட்கோலி பெற்றுள்ளார்.
முன்னதாக கால்பந்து வீரர்கள் ரொனால்டோ, மெஸ்ஸி, நெய்மர் ஆகியோரைத் தொடர்ந்து அதிக பின்தொடர்பவர்களாக கொண்ட 4ஆவது நபராக கோலி மாறியுள்ளார்.