நியூசிலாந்து கிரிக்கெட் அணி 18 ஆண்டுகளில் முதன்முறையாக பாகிஸ்தானுக்குச் சென்று ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கிடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் முறையே செப்டம்பர் 17, 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ராவலிபிண்டியில் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் லாகூரில் செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 3 வரை நடைபெறுகிறது.
இந்த தொடர்கள் டி20 உலகக் கோப்பைக்குத் தயாராவதற்கு இரு அணிகளுக்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்தைத் தொடர்ந்து, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளும் பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளன.