ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக தோனி, ரெய்னா உள்பட சிஎஸ்கே வீரர்கள் துபைக்குச் சென்றுள்ளார்கள்.
கரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 போட்டி, செப்டம்பா் 19-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்குகிறது. துபையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பா் கிங்ஸ் அணிகள் விளையாடவுள்ளன.
இந்நிலையில் தோனி, ரெய்னா உள்பட சிஎஸ்கே வீரர்கள் சென்னையிலிருந்து துபைக்குச் சென்றுள்ளார்கள். இதன் விடியோவை சிஎஸ்கே அணி ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.