சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!
/

வெல்கம் டூ தி கிளப்: அஜாஸ் படேலுக்கு கும்ப்ளே பாராட்டு!

மும்பை டெஸ்டில் 10 விக்கெட்டுகள் எடுத்து சாதனை புரிந்த அஜாஸ் படேலுக்கு மற்றொரு சாதனையாளர் அனில் கும்ப்ளே பாராட்டு தெரிவித்துள்ளார். 

News image
Updated On :4 டிசம்பர் 2021, 1:48 pm IST

மும்பை டெஸ்டில் 10 விக்கெட்டுகள் எடுத்து சாதனை புரிந்த அஜாஸ் படேலுக்கு மற்றொரு சாதனையாளர் அனில் கும்ப்ளே பாராட்டு தெரிவித்துள்ளார். 

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மும்பையில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 109.5 ஓவர்களில் 325 ரன்கள் எடுத்துள்ளது. மயங்க் அகர்வால் 150, அக்‌ஷர் படேல் 52 ரன்கள் எடுத்துள்ளார்கள். நியூசிலாந்துச் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல், 47.5 ஓவர்கள் வீசி, 119 ரன்கள் கொடுத்து 10 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் ஜிம் லேகர், அனில் கும்ப்ளேவுக்கு அடுத்ததாக 10 விக்கெட்டுகள் எடுத்த 3-வது பந்துவீச்சாளர் என்கிற சாதனையை அஜாஸ் படேல் படைத்துள்ளார்.

அஜாஸ் படேலின் சாதனைக்கு அனில் கும்ப்ளே பாராட்டு தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

வெல்கம் டூ தி கிளப் அஜாஸ் படேல். அருமையாகப் பந்துவீசினீர்கள். டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இரு நாள்களில் இச்சாதனையை நிகழ்த்தியது சிறப்பானது என்று கூறியுள்ளார்.

டெஸ்ட்: ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகள்

ஜிம் லேகர் - 10-53 vs ஆஸ்திரேலியா, 1956
அனில் கும்ப்ளே - 10-74, vs பாகிஸ்தான், 1999
அஜாஸ் படேல் - 10-119, vs இந்தியா, 2021

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.