இங்கிலாந்து அணியில் இருக்கும் உதவிப் பணியாளா் ஒருவருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை காலை உறுதியானது.
இதையடுத்து இங்கிலாந்து வீரா்கள், இதர உதவிப் பணியாளா்களுக்கு உடனடியாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவா்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை என அதன் முடிவில் தெரிய வந்ததை அடுத்து இங்கிலாந்து அணியினா் விளையாட அனுமதிக்கப்பட்டனா்.
இதனால் ஆட்டம் 30 நிமிஷங்கள் வரை தாமதமாகத் தொடங்கியது.