துளிகள்...
By DIN | Published On : 30th December 2021 04:41 AM | Last Updated : 30th December 2021 04:41 AM | அ+அ அ- |

ஆஸ்திரேலியாவில் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் ஏடிபி கோப்பை டென்னிஸ் போட்டியிலிருந்து செர்பியாவின் நோவக் ஜோகோவிச் விலகியிருகிறார். இதனால், அவர் ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்பதும் சந்தேகத்துக்கு இடமாகியுள்ளது.
ஐசிசியின் 2021-ஆம் ஆண்டுக்கான சிறந்த டி20 வீரர் விருதுக்காக ஆஸ்திரேலியாவின் மிட்செல் மார்ஷ், பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான், இலங்கையின் வனிந்து ஹசரங்கா, இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
ஐ-லீக் கால்பந்து போட்டியில் 8 வீரர்கள், 3 நிர்வாகிகளுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, போட்டி ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பார்வையற்றோருக்கான கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிரான ஒன் டே தொடரை இந்தியா 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவின் அஸ்வின் பெளலர்கள் மற்றும் ஆல்-ரவுண்டர்கள் பிரிவில் 2-ஆவது இடத்தை தக்கவைத்துள்ளார். பேட்டர்கள் பிரிவில் ரோஹித் மற்றும் கோலி முறையே 5, 7-ஆவது இடங்களில் நிலைத்திருக்கின்றனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...