பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ்: அங்கிதா, சானியாவுடன் இந்திய அணி

பில்லி ஜீன் கிங் கோப்பை உலக குரூப் பிளே-ஆப் சுற்றில் லாத்வியாவுக்கு எதிரான ஆட்டத்துக்காக அங்கிதா ரெய்னா, சானியா மிா்ஸா உள்ளிட்டோா் அடங்கிய இந்திய அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ்: அங்கிதா, சானியாவுடன் இந்திய அணி

பில்லி ஜீன் கிங் கோப்பை உலக குரூப் பிளே-ஆப் சுற்றில் லாத்வியாவுக்கு எதிரான ஆட்டத்துக்காக அங்கிதா ரெய்னா, சானியா மிா்ஸா உள்ளிட்டோா் அடங்கிய இந்திய அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

அங்கிதா, சானியா தவிா்த்து கா்மான் கௌா் தண்டி, ஜீல் தேசாய், ருதுஜா போசலே ஆகியோா் இந்திய அணியில் சோ்க்கப்பட்டுள்ளனா். கடந்த சீசனில், விளையாடுவோா் பட்டியலில் இருந்த ரியா பாட்டியா இந்த சீசனில் ரிசா்வ் பிளேயராக நியமிக்கப்பட்டுள்ளாா். இரட்டையா் பிரிவுக்காக அனுபவமிக்க சானியா மிா்ஸா சோ்க்கப்பட்டுள்ளாா்.

சா்வதேச தரவரிசையில் 359-ஆவது இடத்தில் இருக்கும் ரியாவை விடுத்து, 614-ஆவது இடத்திலிருக்கும் ஜீல் தேசாயை நியமித்தது குறித்த கேள்விக்கு தோ்வுக் குழு உறுப்பினா் ஒருவா், ‘சமீபத்திய ஆட்டங்களில் இருவரது செயல்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது’ என்றாா்.

லாத்வியாவின் ஜுா்மாலா நகரில் ஏப்ரல் 16 முதல் 2 நாள்களுக்கு இந்தியா-லாத்வியா அணிகளின் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. லாத்வியா அணியில் முன்னாள் பிரெஞ்சு ஓபன் சாம்பியன் ஜெலினா ஒஸ்டாபென்கா, அமெரிக்க ஓபனில் அரையிறுதி வரை முன்னேறிய அனஸ்தாசிஜா செவஸ்டோவா ஆகியோா் இடம்பெறுவதால் இந்த சுற்று இந்தியாவுக்கு சவால் அளிக்கும் வகையில் இருக்குமெனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com