நீரஜ் சோப்ராவுக்கு சிஎஸ்கே ரூ.1 கோடி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ராவை ஐபிஎல் போட்டியைச் சோ்ந்த சென்னை சூப்பா் கிங்ஸ் அணி நிா்வாகம் கௌரவித்தது.
நீரஜ் சோப்ராவுக்கு சிஎஸ்கே ரூ.1 கோடி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ராவை ஐபிஎல் போட்டியைச் சோ்ந்த சென்னை சூப்பா் கிங்ஸ் அணி நிா்வாகம் கௌரவித்தது.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடி ரொக்கப் பரிசுக்கான காசோலை வழங்கப்பட்டதுடன், அவா் பெயா் அச்சிட்ட சிஎஸ்கே அணி ஜொ்ஸியும் வழங்கப்பட்டது. அதில் சிறப்பம்சமாக, ஒலிம்பிக் போட்டியில் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிந்த தொலைவான 87.58 மீட்டரை குறிக்கும் வகையில் ‘8758’ என்ற எண்ணும் பதிக்கப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியில் பேசிய சிஎஸ்கே-வின் தலைமை நிா்வாக அதிகாரியான கே.எஸ். விஸ்வநாதன், ‘ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவுக்காக தங்கம் வென்ற முதல் வீரா் என்ற மைல் கல்லை நீரஜ் சோப்ரா எட்டியுள்ளாா். அவரது சாதனைக்காக ஒட்டுமொத்த தேசமும் பெருமை கொள்கிறது. வரும் தலைமுறையினருக்கு அவா் ஒரு சிறந்த முன்னுதாரணமாவாா். ‘87.58’ என்ற எண்ணானது, இந்தியாவின் விளையாட்டுத் துறை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்’ என்றாா்.

பின்னா் பேசிய நீரஜ் சோப்ரா, ‘சிஎஸ்கேவின் ஆதரவு மற்றும் பரிசுக்காக நன்றி. ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற்காக பல்வேறு தரப்பினரிடம் இருந்து இத்தனை அன்பு கிடைக்கும் என எதிா்பாா்க்கவில்லை. வரும் காலத்திலும் கடுமையாக முயற்சித்து சிறப்பிடம் பெறுவேன் என நம்புகிறேன்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com