இந்திய ஏ அணிக்கு எதிராக இரு வீரர்கள் சதம்:  முதல் நாளில் தென்னாப்பிரிக்கா ஏ 343/3

இந்திய ஏ அணிக்கு எதிராக இரு வீரர்கள் சதம்: முதல் நாளில் தென்னாப்பிரிக்கா ஏ 343/3

இந்தியா ஏ - தென்னாப்பிரிக்கா ஏ அணிகளுக்கு இடையிலான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் தொடர் தொடங்கியுள்ளது.

இந்தியா ஏ - தென்னாப்பிரிக்கா ஏ அணிகளுக்கு இடையிலான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் தொடர் தொடங்கியுள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த பிரியங் பஞ்சால் தலைமையிலான இந்திய ஏ அணி தெ.ஆ.-வின் ப்ளூம்ஃபோண்டைனில் நடைபெறும் தொடரில் கலந்துகொள்கிறது. மூன்று அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடர் டிசம்பர் 9-ல் நிறைவுபெறுகிறது. இந்த ஆட்டம் சூப்பர் ஸ்போர்ட் யூடியூப் தளத்தில் நேரலையாக ஒளிபரப்பாகி வருகிறது. 

முதல் அதிகாரபூர்வமற்ற டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய ஏ அணியில் டெஸ்ட் வீரர் விஹாரி, தமிழக வீரர் பாபா அபரஜித் போன்றோர் இடம்பெற்றுள்ளார்கள்.

முதல் நாளன்று தெ.ஆ. ஏ அணி 3 விக்கெட் இழப்புக்கு 343 ரன்கள் எடுத்தது. கேப்டன் பீட்டர் மலான் 157 ரன்களுடனும் ஜேசன் ஸ்மித் 51 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளார்கள். நடுவரிசை வீரர் டோனி 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com