ஊதியம் வாங்காத ஆலோசகராக செயல்படவுள்ளார் தோனி: ஜெய் ஷா

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஊதியமின்றி செயல்படவுள்ளதாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஊதியமின்றி செயல்படவுள்ளதாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

டி20 உலகக் கோப்பைக்கு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. யாரும் எதிர்பாராத விதமாக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு ஆலோசகராக செயல்பட ஊதியமாக தோனி எதையும் கோரவில்லை என பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். 

டி20 உலகக் கோப்பை முதல் ஆட்டத்தில் இந்திய அணி அக்டோபர் 24-ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com