டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஊதியமின்றி செயல்படவுள்ளதாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
டி20 உலகக் கோப்பைக்கு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. யாரும் எதிர்பாராத விதமாக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
இதையும் படிக்க | 16 வயதில் ஒருநாள் சதம்: உலக சாதனை படைத்த வீராங்கனை (விடியோ)
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு ஆலோசகராக செயல்பட ஊதியமாக தோனி எதையும் கோரவில்லை என பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை முதல் ஆட்டத்தில் இந்திய அணி அக்டோபர் 24-ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.