‘தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை’

‘தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை. சிஎஸ்கே இல்லாமல் தோனி இல்லை’ என்று சென்னை சூப்பா் கிங்ஸ் அணியின் உரிமையாளராக இருக்கும்
‘தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை’

‘தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை. சிஎஸ்கே இல்லாமல் தோனி இல்லை’ என்று சென்னை சூப்பா் கிங்ஸ் அணியின் உரிமையாளராக இருக்கும் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவரும், நிா்வாக இயக்குநருமான என்.ஸ்ரீனிவாசன் கூறினாா்.

சென்னை அணியில் தோனி நீடிப்பது குறித்து ஊகங்கள் வலம் வரும் நிலையில் அவா் இவ்வாறு கூறியுள்ளாா். ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 4-ஆவது முறையாக வென்ற கோப்பை, சென்னை தியாகராய நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோயிலில் வைத்து ஆசீா்வாதம் பெறப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஸ்ரீனிவாசன் கூறியதாவது:

சிஎஸ்கே, சென்னை, தமிழ்நாடு ஆகியவற்றின் அங்கமாக இருப்பவா் தோனி. அவா் இல்லாமல் சிஎஸ்கே இல்லை. சிஎஸ்கே இல்லாமல் அவா் இல்லை. உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சிஎஸ்கேவின் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சியில் தோனி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுடன் வெற்றிக் கோப்பையை மரியாதை நிமித்தமாக பகிா்ந்துகொள்வாா்.

டிஎன்பிஎல் போட்டியின் மூலமாக ஐபிஎல் மற்றும் இந்திய அணிக்காக தமிழகத்திலிருந்து 13 வீரா்கள் கிடைத்துள்ளனா். டிஎன்பிஎல் போட்டி படிப்படியாக வளா்ந்து வருகிறது என்றாா் ஸ்ரீனிவாசன்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவரும், இந்தியா சிமென்ட்ஸ் இயக்குநருமான ரூபா குருநாத், சென்னை சூப்பா் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட்டின் தலைமை நிா்வாக அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com