இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான கடைசி 2 டி20 ஆட்டங்களுக்குப் பார்வையாளர்களை அனுமதிக்கக்கோரி மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம் பிசிசிஐயை கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதையும் படிக்க | ஐபிஎல் ஏலம்: அதிக சம்பள உயர்வு பெற்ற வீரர் யார்?
முதல் ஆட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது. கடைசி இரண்டு டி20 ஆட்டங்கள் பிப்ரவரி 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கடைசி 2 டி20 ஆட்டங்களுக்கு பார்வையாளர்களை அனுமதிப்பது தொடர்பான முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி பிசிசிஐயை கேட்டுக்கொண்டுள்ளதாக மாநில கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஆமதாபாத்தில் நடைபெற்ற 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது குறிப்பிடத்தக்கது.