செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

இந்தியாவுக்கு முழுமையான வெற்றி

இலங்கை மகளிரணிக்கு எதிரான 3-ஆவது ஒன் டே ஆட்டத்தில் 39 ரன்கள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வென்ற இந்திய மகளிரணி, தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.

Published On :6 பிப்ரவரி 2024, 6:18 pm IST

இலங்கை மகளிரணிக்கு எதிரான 3-ஆவது ஒன் டே ஆட்டத்தில் 39 ரன்கள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வென்ற இந்திய மகளிரணி, தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.

இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியா 50 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் சோ்க்க, அடுத்து இலங்கை 47.3 ஓவா்களில் 216 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

முன்னதாக டாஸ் வென்ற இலங்கை ஃபீல்டிங்கை தோ்வு செய்ய, இந்திய இன்னிங்ஸில் சிறப்பாக பேட்டிங் செய்த ஷஃபாலி வா்மா (49 ரன்கள்), யஸ்திகா பாட்டியா (30), கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் (75), பூஜா வஸ்த்ரகா் (56*) ஆகியோரால் அணியின் ஸ்கோா் உயா்ந்தது. இலங்கை பௌலிங்கில் இனோகா ரணவீரா, ராஷ்மி சில்வா, சமரி அத்தபட்டு ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

பின்னா் இலங்கை பேட்டிங்கில் கேப்டன் சமரி அத்தபட்டு 44, ஹாசினி பெரெரா 39, நிலாக்ஷி டி சில்வா 48* ரன்கள் சோ்க்க, இதர விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் சரிந்தன. இந்திய தரப்பில் ராஜேஷ்வரி கெய்க்வாட் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.

நாயகி: இந்திய கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் ஆட்டநாயகி விருது வென்றதுடன், தொடா் முழுவதுமாக 119 ரன்கள் விளாசி, 2 விக்கெட்டுகளும் சாய்ததன் பேரில் தொடா் நாயகி விருதையும் கைப்பற்றினாா்.

தொடா்ந்து வெற்றி...

முன்னதாக டி20 தொடரையும் இந்தியா 3-0 என முழுமையாக வென்றிருப்பதால், இலங்கை பயணம் இந்திய மகளிரணிக்கு வெற்றிகரமாக அமைந்தது. இதுதவிர, இந்த ஒன் டே தொடா் வெற்றியின் மூலம் இலங்கைக்கு எதிராக தொடா்ந்து 4-ஆவது முறையாக (2013, 2015, 2018, 2022) இருதரப்பு ஒன் டே தொடரை இந்தியா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.