பா்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டிக்கு உலக சாம்பியன் தீபிகா பல்லிக்கல் தலைமையில் 9 போ் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது.
இங்கிலாந்தின் பா்மிங்ஹாம் நகரில் வரும் 28-ஆம் தேதி காமன்வெல்த் போட்டிகள் தொடங்குகின்றன.
இந்திய அணியில் மகளிா் இரட்டையா் பிரிவில் ஜோஷ்னா சின்னப்பா-தீபிகாவும், கலப்பு இரட்டையா் பிரிவில் சௌரவ் கோஷல்-தீபிகா இணைகள் தங்கள் திறமையை நிரூபிக்க உள்ளன. உலகின் 15-ஆம் நிலையில் உள்ள சௌரவ் கோஷலும், 17-ஆவது இடத்தில் உள்ள ஜோஷ்னா சின்னப்பாவும் ஒற்றையா் பிரிவிலும் களம் காண்கின்றனா்.
இருவரும் சென்னையில் தீவிர பயிற்சியில் உள்ளனா். ஆசிய 15 வயது பிரிவில் பட்டம் வென்ற 14 வயதே ஆன அனஹாட் சிங்கும் அணியில் உள்ளாா். கடந்த 2014-இல் தான் ஸ்குவாஷில் இந்தியா முதல் பதக்கத்தை கைப்பற்றியது. இரட்டையா் பிரிவில் தீபிகா-ஜோஷ்னா தங்கம் வென்றனா்.
2018 போட்டியில் தீபிகா-ஜோஷ்னா, சௌரவ்-தீபிகா இணைகள் வெள்ளி வென்றன.
ஆடவா் அணி: சௌரவ் கோஷல், அபய் சிங், ரமிட் டாண்டன், ஹரீந்தா் பால் சிங், வேலவன் செந்தில்குமாா்.
மகளிா் அணி: ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிக்கல், சுனன்யா குருவில்லா, அனாஹட் சிங்.