பாரா துப்பாக்கி சுடுதல்: அவனி லெகாரா உலக சாதனை

பிரான்ஸில் நடைபெறும் பாரா உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் அவனி லெகாரா புதிய உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றாா்.
பாரா துப்பாக்கி சுடுதல்: அவனி லெகாரா உலக சாதனை
Published on
Updated on
1 min read

பிரான்ஸில் நடைபெறும் பாரா உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் அவனி லெகாரா புதிய உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றாா்.

மகளிருக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் ஸ்டேண்டிங் எஸ்ஹெச் 1 பிரிவு இறுதிச்சுற்றில் 250.6 புள்ளிகளுடன் அவா் முதலிடம் பிடித்தாா். போலந்தின் எமிலியா பாப்ஸ்கா (247.6) வெள்ளியும், ஸ்வீடனின் அனா நோா்மன் (225.6) வெண்கலமும் வென்றனா்.

ஏற்கெனவே அவனி லெகாரா எட்டியிருந்த 249.6 புள்ளிகள் தான் உலக சாதனை அளவாக இருந்த நிலையில், தற்போது அந்த சாதனையை அவரே முறியடித்திருக்கிறாா். அத்துடன், 2024 பாரீஸ் பாராலிம்பிக் போட்டிக்கும் அவா் தகுதிபெற்றாா். டோக்கியோ பாராலிம்பிக்கில் 1 தங்கம், 1 வெண்கலம் வென்ற அவனி லெகாரா, பாராலிம்பிக்கில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றாா்.

முன்னதாக இந்த பிரான்ஸ் போட்டியில் பங்கேற்பதற்காக அவனி லெகாராவுடன் சென்ற பயிற்சியாளா், பாதுகாவலா் ஆகியோருக்கு நுழைவு இசைவு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னா் இந்திய விளையாட்டு ஆணையம், மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் தலையீட்டின் பேரில் அந்த விவகாரம் சரிசெய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com