நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

முன்னேற்றப்பாதையில் இந்திய மகளிர் ஹாக்கி அணி: சுஷீலா சானு

இளம் வீராங்கனைகள் மூலம் இந்திய ஹாக்கி மகளிர் அணி முன்னேற்றப் பாதையில் சென்றுகொண்டிருப்பதாக மூத்த வீராங்கனை சுஷீலா சானு தெரிவித்துள்ளார். 

News image

சுஷீலா சானு (கோப்புப் படம்)

Updated On :21 செப்டம்பர் 2022, 10:03 pm IST

இளம் வீராங்கனைகள் மூலம் இந்திய ஹாக்கி மகளிர் அணி முன்னேற்றப் பாதையில் சென்றுகொண்டிருப்பதாக மூத்த வீராங்கனை சுஷீலா சானு தெரிவித்துள்ளார். 

எஃப்.ஐ.எச் தேசிய ஹாக்கி கோப்பைக்கான போட்டி வரும் டிசம்பர் மாதம் ஸ்பெயினில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய மகளிர் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

காமன்வெல்த் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு நடைபெறும் சர்வதேச போட்டி என்பதால் இந்திய மகளிர் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 

இதற்கான பயிற்சிகள் குறித்து பேசிய இந்திய மகளிர் ஹாக்கி அணியின் மூத்த வீராங்கனை சுஷீலா சானு, போட்டியில் களம் காண நீண்ட நேரம் உள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்காக தயாராகி வருகிறோம். ஆட்டத்தின்போது சறுக்கல்கள் இருந்த இடங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறோம். இளம் வீராங்கனைகள் தங்களது 100 சதவிகித திறனை பயிற்சியின்போது நாள்தோறும் வெளிப்படுத்துகின்றனர். இதனால் இந்திய அணி முன்னேற்றப்பாதையில் சென்றுகொண்டுள்ளதை உணர முடிகிறது எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.