எஃப்ஏ கோப்பை: செல்சி வெற்றி
இங்கிலாந்தில் நடைபெறும் எஃப்ஏ கோப்பை கால்பந்து போட்டியின் 2-ஆவது அரையிறுதியில் செல்சி 2-0 என்ற கோல் கணக்கில் கிரிஸ்டல் பேலஸை வீழ்த்தியது.
இûதயடுத்து இறுதி ஆட்டத்தில் லிவர்பூல் அணியின் சவாலை வரும் மே 14-ஆம் தேதி சந்திக்க இருக்கிறது செல்சி. இப்úபாட்டியில் செல்சி 8 முறையும், லிவர்பூல் 7 முறையும் சாம்பியனாக்கியுள்ளன. கடந்த பிப்ரவரியில் லீக் கோப்பை போட்டியில் லிவர்பூல் அணி செல்சியை வீழ்த்தி சாம்பியனாக்கியது. அதற்கு செல்சி இதில் பதிலடி தருமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
லண்டனில் உள்ள வெம்ப்ளி மைதானத்தில், இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற அûரயிறுதி ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளுக்குமே கோல் வாய்ப்பு கிடைக்கவில்லை. 2-ஆவது பாதியில் 65-ஆவது நிமிஷத்தில் ரூபன் லோஃப்டஸ் சீக் அடித்த கோலால் செல்சி முன்னிலை பெற்றது. தொடர்ந்து ஆட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த செல்சிக்காக 76-ஆவது நிமிஷத்தில் மேசன் கோலடிக்க, இறுதியில் அந்த அணியே வெற்றி பெற்றது.
உரிமையாளர்: உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷியாவுக்கு எதிரான தடை நடவடிக்கைகள் விûளயாட்டுத் துறையிலும் மேற்ùகாள்ளப்படுகின்றன. அந்த வகையில் செல்சி அணியின் உரிமையாளர் பொறுப்பிலிருந்து ரஷியரான ரோமன் அப்ரமோவிச் விலகியிருக்கும் நிலையில், மே 14-ஆம் தேதி இறுதி ஆட்டத்துக்கு முன் செல்சியின் புதிய உரிமையாளர் இறுதி செய்யப்படலாம் எனத் தெரிகிறது. செல்சி அணி ரூ.30,000 கோடி வரை விற்பனையாகலாம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.