சூர்யகுமார் அரைசதம்: முதல் வெற்றியை ருசித்த மும்பை!

ராஜஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை அணி, இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
சூர்யகுமார் அரைசதம்: முதல் வெற்றியை ருசித்த மும்பை!

ராஜஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை அணி, இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 44ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. நவி மும்பையின் டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

மறைந்த ஆஸி. கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னேவை கௌரவிக்கும் விதமாக ராஜஸ்தான் அணி 'SW23' என அச்சிடப்பட்ட சிறப்பு ஜெர்சி அணிந்து இன்று விளையாடியது.

ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பட்லர் 67 ரன்கள் குவித்தார்.

தொடர்ந்து விளையாடிய மும்பை அணி 20வது ஓவரில் 5 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 51 ரன்கள் எடுத்தார்.

இந்த தொடரில் 8 ஆட்டங்களில் தொடர்ந்து தோல்வியடைந்த மும்பை அணி முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com