கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

நிபுணர்கள் பாராட்டு: பிரபல செஸ் வீரரை வீழ்த்தி பிரக்ஞானந்தா முன்னிலை

இதுபோல ஆரோனியனை நொறுக்கிய ஓர் ஆட்டத்தை நான் பார்த்ததே இல்லை என...

News image
Updated On :19 ஆகஸ்ட் 2022, 11:36 am IST

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு அடுத்ததாக அமெரிக்காவின் மியாமியில் நடைபெறும் (ரேபிட் முறையிலான) எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ கோப்பைப் போட்டியில் விளையாடி வருகிறார் இந்தியாவின் பிரபல செஸ் வீரர் பிரக்ஞானந்தா.

முதல் சுற்றில் உலகின் நெ.1 ஜூனியர் வீரர் அலிரேஸா ஃபிரோஜாவை 2.5-1.5 என வீழ்த்தினார் பிரக்ஞானந்தா 2-வது சுற்றில் பிரபல வீரர் அனிஷ் கிரியை 2.5-1.5 என வீழ்த்தினார். 3-வது சுற்றில் முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்தபோதும் மீண்டு வந்து 2.5-1.5 என ஹான்ஸ் நீமன்னை வீழ்த்தினார். இதனால் அவர் தொடர்ந்து கார்ல்சனுடன் இணைந்து முன்னிலையில் உள்ளார்.

இந்நிலையில் 4-வது சுற்றில் பிரபல வீரர் லெவோன் ஆரோனியனை எதிர்கொண்டார் பிரக்ஞானந்தா. முதல் இரு ஆட்டங்களும் டிரா ஆகின. எனினும் அடுத்த இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 3-1 என ஆரோனியனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா. 3-வது ஆட்டத்தில் 11-வது நகர்த்தலிலேயே ஆட்டத்தைத் தன் வசம் கொண்டு வந்து ஆட்டத்தை பிரக்ஞானந்தா வென்றது செஸ் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இதுபோல ஆரோனியனை நொறுக்கிய ஓர் ஆட்டத்தை நான் பார்த்ததே இல்லை என கிராண்ட்மாஸ்டர் பீட்டர் லேகோ பிரக்ஞானந்தாவைப் புகழ்ந்துள்ளார். 

4 சுற்றுகளின் முடிவில் பிரக்ஞானந்தா, கார்ல்சனுடன் இணைந்து முதலிடத்தில் உள்ளார். 5-வது சுற்றில் லியம் லீயை எதிர்கொள்கிறார் பிரக்ஞானந்தா. ஆகஸ்ட் 21 அன்று 7-வது மற்றும் இறுதிச்சுற்றில் கார்ல்சனுடன் மோதுகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.