துபை ஓபன் செஸ் போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் அர்ஜுன் எரிகைசி, இந்தியாவின் நெ.2 செஸ் வீரராக முன்னேறியுள்ளார்.
அபுதாபி மாஸ்டர்ஸ் செஸ் போட்டியை இந்தியாவின் 18 வயது அர்ஜூன் எரிகைசி சமீபத்தில் வென்றார். 9 சுற்றுகளின் முடிவில் 7.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் செஸ் தரவரிசையில் 2724 புள்ளிகளுடன் 24-ம் இடத்துக்கு முன்னேறினார் அர்ஜுன். இவருக்கு முன்பு விஸ்வநாதன் ஆனந்த் 2756 புள்ளிகளுடன் 12-ம் இடத்திலும் குகேஷ் 2728 புள்ளிகளுடன் 20-ம் இடத்திலும் இருந்தார்கள்.
அபுதாபி ஓபன் செஸ் போட்டிக்கு அடுத்ததாக துபை ஓபன் செஸ் போட்டியில் விளையாடி வரும் அர்ஜுன் எரிகைசி, முதல் மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்று பிரக்ஞானந்தா உள்பட 7 வீரர்களுடன் இணைந்து முதலிடத்தில் உள்ளார். இதையடுத்து தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளார்.
தற்போதைய செஸ் தரவரிசையில் முதல் இடத்தில் கார்ல்சன் தொடர்ந்து நீடிக்கிறார். விஸ்வநாதன் ஆனந்த் 12-ம் இடத்தில் உள்ள நிலையில் குகேஷைப் பின்னுக்குத் தள்ளி 2728.7 புள்ளிகளுடன் 20-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார் அர்ஜுன் எரிகைசி. 2725.7 புள்ளிகளுடன் குகேஷ் 24-ம் இடத்துக்கு இறங்கியுள்ளார். இதன் மூலம் இந்தியாவின் நெ.2 செஸ் வீரராக முன்னேறியுள்ளார் அர்ஜுன் எரிகைசி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாஃபியாவின் பிடியில் கல்வி அமைப்புமுறை: கேஜரிவால் குற்றச்சாட்டு
இன்றைய ராசி பலன் (31.05.2026) - விருச்சிகம்

இன்றைய ராசி பலன்கள் (மே 31 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு அமைதி!

தைரியம் கூடும் மகர ராசிக்கு: இன்றைய ராசி பலன்கள் (மே 31)
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



