தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

பல ஆட்டங்களில் நான் விளையாட மாட்டேன்: பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் அறிவிப்பு

2022-23 ரஞ்சி கோப்பைப் போட்டியின் பல ஆட்டங்களில் காயம் காரணமாக விளையாடப் போவதில்லை என...

News image
Updated On :13 டிசம்பர் 2022, 2:57 pm IST

2022-23 ரஞ்சி கோப்பைப் போட்டியின் பல ஆட்டங்களில் காயம் காரணமாக விளையாடப் போவதில்லை என இடக்கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அஹமது கூறியுள்ளார். 

25 வயது கலீல் அஹமது, இந்திய அணிக்காக 11 ஒருநாள், 14 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடைசியாக நவம்பர் 2019-ல் இந்தியாவுக்காக விளையாடினார். உள்ளூர் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடுகிறார். ஐபிஎல் 2022 போட்டியில் தில்லி அணிக்காக விளையாடிய கலீல் அஹமது, 10 ஆட்டங்களில் 16 விக்கெட்டுகளை எடுத்தார். 

இந்நிலையில் காயம் காரணமாக சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார் கலீல் அஹமது. இதுபற்றி ட்விட்டரில் அவர் கூறியதாவது:

கிரிக்கெட்டிலிருந்து வெளியே இருப்பது துரதிர்ஷ்டவசமாகும். ஆனால் என்னுடைய உடல்நிலையால் இந்த வருட ரஞ்சி கோப்பைப் போட்டியின் பல ஆட்டங்களை நான் தவறவிடுவேன். குணமாவதற்கான முயற்சியில் உள்ளேன். முழு உடற்தகுதி நிலையை அடைந்த பிறகு மீண்டும் விளையாட வருவேன். அனைவருடைய வாழ்த்துகளுக்கும் நன்றி என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.