தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணிக்குக் கிடைத்துள்ள சிறிய சலுகை!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற பல அணிகள் போட்டியிடுகின்றன.

News image
Updated On :13 டிசம்பர் 2022, 11:06 am IST

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற பல அணிகள் போட்டியிடுகின்றன.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் தோற்றுள்ளதால் இந்திய அணிக்குச் சிறிய சலுகை கிடைத்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி தற்போது 4-வது இடத்தில் உள்ளது. இந்திய அணி அடுத்ததாக வங்கதேசத்துக்கு எதிராக 2 டெஸ்டுகளிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 டெஸ்டுகளிலும் விளையாடவுள்ளது.

இந்த 6 டெஸ்டுகளிலும் இந்திய அணி வென்றால் 68.06% என வலுவான நிலையில் இருக்கும். இதுவே இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற போதுமானதாக இருக்கும். தற்போது 75% வைத்திருக்கும் ஆஸி. அணி இந்தியாவுடன் தோற்றால் கீழே இறங்கிவிடும். 

இந்த 6 டெஸ்டுகளில் ஒரு டெஸ்டில் இந்திய அணி தோற்றாலும் 62.5% இருக்கும். இந்த எண்களை ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் தாண்ட முடியாது. ஆனால் 2 டெஸ்டுகளில் தோற்றால் 56.94 % என இறங்கிவிடும். பிறகு மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளைக் கொண்டே இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற முடியும். 

இங்கிலாந்திடம் தோற்றதால் பாகிஸ்தான் அணியால் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: புள்ளிகள் பட்டியல்

1. ஆஸ்திரேலியா - 75%
2. தென்னாப்பிரிக்கா - 60%
3. இலங்கை - 53.33%
4. இந்தியா - 52.08%
5. இங்கிலாந்து - 44.44%

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.