துளிகள்...
By DIN | Published On : 26th January 2022 02:23 AM | Last Updated : 26th January 2022 02:23 AM | அ+அ அ- |

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் செவ்வாய்க்கிழமை அன்று மும்பை சிட்டி எஃப்சி - நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணிகள் மோதிய 71-ஆவது ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
கேமரூனில் ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்ற மைதானத்துக்கு வெளியே ரசிகா்களிடையே ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 8 போ் உயிரிழந்தனா்.
இந்திய அணி தோல்விகளை சந்திக்கும் இந்தத் தருணம் தற்காலிகமானதே என்று அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளா் ரவி சாஸ்திரி கூறியுள்ளாா்.
சையது மோடி சா்வதேச பாட்மின்டன் போட்டியில் ஆடவா் ஒற்றையா் இறுதி ஆட்டத்தில் ஒரு போட்டியாளருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு ஆட்டம் கைவிடப்பட்டதால், பரிசுத் தொகையை இறுதி ஆட்டக்காரா்கள் இருவரும் பகிா்ந்துகொண்டனா்.
காயத்திலிருந்து மீண்டுள்ள இந்திய கேப்டன் ரோஹித் சா்மா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒயிட் பால் தொடா்களுக்காக தயாா் நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புரோ கபடி லீக்...
கா்நாடக மாநிலம், பெங்களூரில் நடைபெற்று வரும் புரோ கபடி லீக் போட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஹரியாணா ஸ்டீலா்ஸ் வீரரின் புள்ளிகளை கைப்பற்ற முயற்சிக்கும் தெலுகு டைட்டன்ஸ் வீரா். இந்த ஆட்டம் 39 -39 என்ற புள்ளிகள் கணக்கில் சமனில் முடிந்தது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...