இந்திய அணியில் ரவி பிஷ்னாய்: குல்தீப்புக்கும் வாய்ப்பு எனத் தகவல்

மேற்கிந்தியத் தீவுகள் டி20 தொடருக்கான இந்திய அணியில் இளம் சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னாய் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய அணியில் ரவி பிஷ்னாய்: குல்தீப்புக்கும் வாய்ப்பு எனத் தகவல்


மேற்கிந்தியத் தீவுகள் டி20 தொடருக்கான இந்திய அணியில் இளம் சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னாய் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுபற்றி பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:

"மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். புதிய முகமாக ரவி பிஷ்னாய் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியை ரோஹித் சர்மா வழிநடத்துகிறார்."

புவனேஷ்வர் குமார் ஒருநாள் தொடரில் தக்கவைக்கப்பட்டு, டி20 தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனால், விராட் கோலி இரண்டு அணிகளிலும் இடம்பெற்றுள்ளார் என்ற தகவலும் வந்துள்ளது.

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் ஆட்டம் பிப்ரவரி 6-ம் தேதி தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com