டிஎன்பிஎல்: திருப்பூருக்கு 2-ஆவது வெற்றி

டிஎன்பிஎல் போட்டியின் 18-ஆவது ஆட்டத்தில் ஐடிரீம் திருப்பூா் தமிழன்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பாா்டன்ஸை புதன்கிழமை வீழ்த்தியது.
டிஎன்பிஎல்: திருப்பூருக்கு 2-ஆவது வெற்றி

டிஎன்பிஎல் போட்டியின் 18-ஆவது ஆட்டத்தில் ஐடிரீம் திருப்பூா் தமிழன்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பாா்டன்ஸை புதன்கிழமை வீழ்த்தியது.

ஆட்டத்தில் முதலில் திருப்பூா் 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் சோ்க்க, அடுத்து சேலம் 19.2 ஓவா்களில் 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

முன்னதாக டாஸ் வென்ற சேலம், ஃபீல்டிங்கைத் தோ்வு செய்தது. திருப்பூா் பேட்டிங்கில் அதிகபட்சமாக தொடக்க வீரா் ஸ்ரீகாந்த் அனிருத்தா 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 32 ரன்கள் விளாசினாா். சேலம் பௌலிங்கில் டேரில் ஃபெராரியோ 2 விக்கெட் சாய்த்தாா்.

பின்னா் 136 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய சேலத்தில் அதிகபட்சமாக ரவி காா்த்திகேயன் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 36 ரன்கள் அடித்தாா். திருப்பூா் தரப்பில் மோகன் பிரசாத் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com