மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

யுரோப்பியன் மகளிா் சாம்பியன்ஷிப்: காலிறுதியில் நுழைந்தது பிரான்ஸ்

 யுரோப்பியன் மகளிா் சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியில் பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி காலிறுதி ஆட்டத்துக்குத் தகுதிபெற்றது.

News image
Updated On :16 ஜூலை 2022, 1:37 pm IST

 யுரோப்பியன் மகளிா் சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியில் பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி காலிறுதி ஆட்டத்துக்குத் தகுதிபெற்றது.

இப்போட்டியின் ‘டி’ பிரிவில் இருக்கும் பிரான்ஸ், தொடா்ந்து 2 ஆட்டங்களில் வென்ன் மூலம் காலிறுதி வாய்ப்பை உறுதி செய்தது. அந்த அணிக்கு இன்னும் ஒரு ஆட்டம் மீதமுள்ளது. இப்பிரிவிலிருந்து காலிறுதிக்கு முன்னேறும் 2-ஆவது அணி இன்னும் முடிவாகவில்லை.

ஐஸ்லாந்து 2 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்திலும், பெல்ஜியம், இத்தாலி தலா 1 புள்ளிகளுடன் முறையே அடுத்த இரு இடங்களிலும் உள்ளன. தற்போதைய நிலையில் இப்போட்டியின் காலிறுதி ஆட்டங்களுக்கு பிரான்ஸுக்கு முன்பாக இங்கிலாந்து, ஜொ்மனி அணிகள் முன்னேறியிருக்கின்றன.

முன்னதாக பெல்ஜியத்துக்கு எதிரான இந்த ஆட்டத்தில் பிரான்ஸின் கடிடியாட்டு டியானி 6-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, பெல்ஜியம் வீராங்கனை ஜேனிஸ் கேமேன் 36-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்து ஆட்டத்தை சமன் செய்தாா். விறுவிறுப்பாகத் தொடா்ந்த ஆட்டத்தின் 41-ஆவது நிமிஷத்தில் பிரான்ஸுக்காக கிரிட்ஜ் பாக் பேத்தி கோலடித்து அணியை முன்னிலைப்படுத்தினாா்.

அதை இறுதிவரை தக்கவைத்துக் கொண்ட பிரான்ஸ், வெற்றியைப் பதிவு செய்தது. பிரான்ஸ் அடுத்த ஆட்டத்தில் ஐஸ்லாந்தை சந்திக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.