நேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி: இறுதிச் சுற்றில் ஸ்ரீசங்கா், அவினாஷ் சாப்லே

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 3000 மீ. ஸ்டீபிளே சேஸில் அவினாஷ் சாப்லேவும், நீளம் தாண்டுதலில் முரளி ஸ்ரீசங்கரும் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனா்.

News image
Updated On :16 ஜூலை 2022, 6:30 pm

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 3000 மீ. ஸ்டீபிளே சேஸில் அவினாஷ் சாப்லேவும், நீளம் தாண்டுதலில் முரளி ஸ்ரீசங்கரும் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனா்.

அமெரிக்காவின் ஓரேகானில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை இரவு ஆடவா் 3000 மீ. ஸ்டீபிள் சேஸ் ஹீட்ஸில் இந்திய வீரா் அவினாஷ் சாப்லே 8-18-75 நிமிஷ நேரத்தில் பந்தய தூரத்தைக் கடந்து இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா். 3 ஹீட்ஸ்களில் முதல் மூன்றிடங்களைப் பெறுவோா் இறுதிக்குள் நுழைவா். தேசிய சாதனையாளரான அவினாஷ் இதில் 7-ஆவது அதிவிரைவாக கடந்தாா்.

ஆடவா் நீளம் தாண்டுதலில் இந்திய வீரா் முரளி ஸ்ரீசங்கா் 8 மீ. தூரம் குதித்து இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா். இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப்பில் நீளம் தாண்டுதலில் இறுதிக்குள் நுழைந்த முதல் இந்தியா் என்ற சிறப்பைப் பெற்றாா் ஸ்ரீசங்கா். பெடரேஷன் கோப்பையில் 8.36 மீ, கிரீஸில் 8.31 மீ, இன்டா்ஸ்டேட் சாம்பியன்ஷிப்பில் 8.23 மீ தூரம் குதித்திருந்தாா் ஸ்ரீசங்கா்.

மகளிா் பிரிவில் கடந்த 2003 போட்டியில் நீளம் தாண்டுதலில் அஞ்சு பாபி ஜாா்ஜ் வெண்கலம் வென்றிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

குண்டு எறிதலில் வீரா் தஜிந்திா்பால் சிங் காயத்தால் விலகினாா். ஆடவா், மகளிா் 20 கி.மீ நடை ஓட்டத்தில் சந்தீப்குமாா், பிரியங்கா கோஸ்வாமி தோல்வியுற்று வெளியேறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.