திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஆஸ்திரேலியாவில் டி20 போட்டியில் விளையாடவுள்ள சிஎஸ்கே வீரர்

இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் திட்டத்தை சென்னையைச் சேர்ந்த எம்.ஆர்.எஃப். நிறுவனத்துடன் இணைந்து...

News image

முகேஷ் செளத்ரி

Updated On :22 ஜூலை 2022, 4:49 pm IST

ஐபிஎல் 2022 போட்டியில் கவனம் பெற்ற முகேஷ் செளத்ரி (சிஎஸ்கே), சேதன் சக்காரியா ஆகிய இருவரும் ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடைபெறும் டி20 போட்டியில் விளையாடவுள்ளார்கள். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த முகேஷ் செளத்ரி, சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் 13 ஆட்டங்களில் 16 விக்கெட்டுகள் எடுத்தார். 2021-ல் ஐபிஎல் போட்டியில் அறிமுகமான சேதன் சக்காரியா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி 14 ஆட்டங்களில் 14 விக்கெட்டுகள் எடுத்தார். இந்த வருடம் தில்லி கேபிடல்ஸ் அணிக்காக 3 ஆட்டங்களில் மட்டும் விளையாடினார். 

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாந்தில் நடைபெறும் கேஎஃப்சி டி20 மேக்ஸ் சீரீஸ் போட்டியில் முகேஷ் செளத்ரியும் சேதன் சக்காரியாவும் விளையாடவுள்ளார்கள். மேலும் இருவரும் பிரிஸ்பேன் மைதானத்தில் பயிற்சியும் பெறவுள்ளார்கள். இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் திட்டத்தை சென்னையைச் சேர்ந்த எம்.ஆர்.எஃப். நிறுவனத்துடன் இணைந்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா மேற்கொள்கிறது. அத்திட்டத்தின் வழியாகவே முகேஷ் செளத்ரியும்  சேதன் சக்காரியாவும் ஆஸ்திரேலியாவில் விளையாடும் வாய்ப்பைத் தற்போது பெற்றுள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.