கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

 செஸ் ஒலிம்பியாட்: சென்னையில் இன்று கோலாகலம்

உலகின் மிகப்பெரிய செஸ் திருவிழாவான 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்குகிறது.

News image

ஒலிம்பியாட் போட்டியையொட்டி பல மாநிலங்களைக் கடந்து சென்னைக்கு வந்த ஜோதியை ஏந்தியவாறு போட்டி நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கம் நோக்கி எடுத்துச் சென்ற முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்.

Updated On :28 ஜூலை 2022, 8:38 am

DIN

உலகின் மிகப்பெரிய செஸ் திருவிழாவான 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்குகின்றன.
 பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடக்க விழாவில் கலந்து கொள்கின்றனர்.
 ஃபிடே, ஏஐசிஎஃப், தமிழக அரசு சார்பில் சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள போர்பாயிண்ட்ஸ் ஓட்டலில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகின்றன.
 இதற்காக 2 பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு ஒரே நேரத்தில் 1400 பேர் ஆடக்கூடிய வகையில் 702 டிஜிட்டல் செஸ் போர்டுகள் நிறுவப்பட்டுள்ளன.
 செஸ் ஒலிம்பியாட் வரலாற்றிலேயே இப்போட்டிக்கு தான் 187 நாடுகளில் இருந்து 2,500-க்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். அனைவருக்கும் 3,000-க்கு மேற்பட்ட தங்கும் அறைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 இறுதி ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், புதன்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டி நடைபெறவுள்ள இடத்தில் நேரில் ஆய்வு செய்தார்.

Story image


 150 மாணவ, மாணவியர் விமானப் பயணம்: அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் 150 பேர் சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு விமானம் மூலம் சிறப்பு பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களை அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தங்கம் தென்னரசு, சிவ.வீ. மெய்யநாதன், தா.மோ.அன்பரசன், சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.
 ஃபிடே தலைவர் ஆய்வு: போட்டியில் பங்கேற்கும் வெளிநாட்டு அணிகள் சென்னைக்கு வந்து சேர்ந்துள்ள நிலையில், சர்வதேச செஸ் சம்மேளனம் (ஃபிடே) தலைவர் அர்காடி டிவோர்கோவிச், ஏஐசிஎஃப் நிர்வாகிகள் சஞ்சய் கபூர், பரத் செளஹான் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
 வெள்ளிக்கிழமை முதல் சுற்று ஆட்டங்கள் தொடங்குகின்றன. ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை மொத்தம் 11 சுற்று ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
 பதக்கமே இலக்கு: ஹரிகா

Story image

மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாடில் கண்டிப்பாக பதக்கம் வெல்வேன் என நிறைமாத கர்ப்பிணியும், இந்திய ஏ அணி வீராங்கனையுமான துரோணவல்லி ஹரிகா கூறியுள்ளார்.
 கர்ப்பிணியாக இருந்தாலும், போட்டியில் பங்கேற்று ஆடுவதற்கான மன உறுதியுடன் உள்ளேன். ஏ அணி உறுப்பினர்கள் சிறப்பான பார்மில் உள்ளனர். ஜார்ஜியா, உக்ரைன், போலந்து, அமெரிக்கா, கஜகஸ்தான் உள்ளிட்டவை நமக்கு சவாலாக இருக்கும். ஒலிம்பியாட் போட்டி நடப்பதால் செஸ் குறித்து இந்தியாவில் அதிக விழிப்புணர்வு ஏற்பட்டு, சிறுவர், சிறுவர் மேலும் அதிகமாக பின்பற்றுவர் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.