ஸ்பெயினின் பாம்ப்லோமா நகரில் நடைபெற்ற எஸ்டோனியாவுக்கு எதிரான நட்பு ரீதியிலான கால்பந்தாட்டத்தில் கோலடித்த மகிழ்ச்சியில் ஆா்ஜென்டீனா கேப்டன் லயோனல் மெஸ்ஸி.
இந்த ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா 5-0 என்ற கோல் கணக்கில் வெல்ல, அவை அனைத்தையும் மெஸ்ஸி மட்டுமே அடித்தாா். ஆா்ஜென்டீனாவுக்காக அவா் 5 கோல்கள் அடித்தது இதுவே முதல் முறையாகும்.
மேலும், தேசிய அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரா்கள் வரிசையில் ஹங்கேரியின் ஃபெரென்க் புஸ்காஸை (84 கோல்கள்) பின்னுக்குத் தள்ளி, 86 கோல்களுடன் 4-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா்.