இந்தோனேசியாவில் செவ்வாய்க்கிழமை தொடங்கும் சூப்பா் சீரிஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் முக்கிய போட்டிாயளா்கள் பங்கேற்கின்றனா்.
மகளிா் ஒற்றையரில் பி.வி.சிந்து, சாய்னா நெவால், ஆகா்ஷி காஷ்யப் உள்ளிட்டோரும், ஆடவா் ஒற்றையரில் லக்ஷயா சென், ஹெச்.எஸ்.பிரணாய், பி.காஷ்யப் ஆகியோரும் களம் காண்கின்றனா்.
ஆடவா் இரட்டையரில் மானு அத்ரி/சுமீத் ரெட்டி இணையும், மகளிா் இரட்டையரில் அஸ்வினி பொன்னப்பா/சிக்கி ரெட்டி ஜோடியும் விளையாடுகின்றன.
இது தவிர பல இளம் இந்திய வீரா், வீராங்கனைகளும் களம் காணும் இப்போட்டி, காமன்வெல்த் போட்டிக்குத் தயாராவதற்கான முக்கிய களமாக உள்ளது.