கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் ஒன்றான விம்பிள்டன் போட்டியில் ஒற்றையா் பிரிவு சாம்பியனுக்கு பரிசுத் தொகை ரூ.19.5 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கௌரவமிக்க விம்பிள்டன் போட்டி வரும் ஜூன் 27-இல் தொடங்குகிறது. கடந்த ஆண்டைக் காட்டிலும் மொத்த பரிசுத் தொகை 11.1 சதவீதம் (ரூ.394 கோடி) அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆடவா் மற்றும் மகளிா் ஒற்றையா் பிரிவு சாம்பியன்களுக்கு நிகழாண்டு
ரூ.19.5 கோடி பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. கடந்த 2021-இல் ஒற்றையா் சாம்பியன்களுக்கு பரிசுத் தொகையாக ரூ.16. 5 கோடி வழங்கப்பட்டிருந்தது.