தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

இங்கிலாந்தில் பயிற்சி பெறவுள்ள மும்பை இந்தியன்ஸ் உள்ளூர் வீரர்கள்

மும்பை இந்தியன்ஸ் அணியைச் சேர்ந்த உள்ளூர் வீரர்களை ஜூலையில் இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்று...

News image

மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்

Updated On :29 ஜூன் 2022, 6:53 am

ஐபிஎல் 2022, இந்திய உள்ளூர் போட்டிகள் என அனைத்தும் முடிந்து விட்டன. 

இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் வருடம் முழுவதும் விளையாடுவார்கள். அடுத்த உள்ளூர் போட்டி தொடங்க எப்படியும் நான்கைந்து மாதங்கள் ஆகிவிடும். அதுவரை இதர வீரர்கள் என்ன செய்வார்கள்?

இதற்காக ஒரு புதிய திட்டம் தீட்டியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

இந்திய அணியில் இடம்பெறாத மும்பை இந்தியன்ஸ் அணியைச் சேர்ந்த உள்ளூர் வீரர்களை ஜூலையில் இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்று அங்குள்ள டி20 கிளப்புகளுடன் விளையாட வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி திலக் வர்மா, குமார் கார்த்திகேயா, ரமன்தீப் சிங், ஹிருத்திக் ஷோகீன், முருகன் அஸ்வின் போன்ற மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் இங்கிலாந்துக்குச் சென்று விளையாடவுள்ளார்கள். தற்போது இங்கிலாந்தில் உள்ள அர்ஜூன் டெண்டுல்கரும் இளம் தென்னாப்பிரிக்க வீரர் பிரேவிஸும் இந்தக் குழுவில் இணைந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. அடுத்த மூன்றரை மாதங்களுக்கு உள்ளூர் ஆட்டங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் மூன்று வாரங்களுக்கு இங்கிலாந்தில் பயிற்சியெடுத்து அடுத்த ஐபிஎல் போட்டிக்கு வீரர்களைத் தயார் செய்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. மேலும் இதற்கு பிசிசிஐயின் அனுமதியும் தேவையில்லை எனக் கூறப்படுகிறது.பயிற்சி பெறும் வீரர்களைக் கண்காணிக்க தலைமைப் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்தனேவும் இங்கிலாந்துக்குச் செல்லவுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.