காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

மகளிர் உலகக் கோப்பை: குடும்பத்துக்காகப் போட்டியை விட்டு விலகிய நியூசி. உதவிப் பயிற்சியாளர்

நியூசிலாந்து மகளிர் அணியின் பயிற்சியாளர் ஜகோப் ஓரம், உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

News image

ஜகோப் ஓரம் (கோப்புப் படம்)

Updated On :21 மார்ச் 2022, 11:25 am IST

நியூசிலாந்து மகளிர் அணியின் பயிற்சியாளர் ஜகோப் ஓரம், உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

நியூசிலாந்தில் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது. இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள நியூசிலாந்து அணி, 2-ல் மட்டும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 6-ம் இடத்தில் உள்ளது. கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராகப் பெரிய அளவில் வெற்றி பெற்றால் மட்டுமே நியூசி. அணியால் அரையிறுதிக்குத் தகுதி பெற இதர அணிகளுடன் போட்டியிட முடியும். 

நியூசிலாந்து அணியின் உதவிப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ஜகோப் ஓரம் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஓரமின் மனைவி, இரு குழந்தைகள் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதையடுத்து குடும்பத்தினருக்கு உதவுவதற்காக உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து ஓரம் விலகியுள்ளார். இதுபற்றி நியூசி. அணியின் பயிற்சியாளர் பாப் கார்டர் கூறியதாவது:

நிச்சயமாக குடும்பம் தான் முக்கியம் என்பதால் வீட்டுக்குச் சென்று குடும்பத்தினருக்கு உதவ வேண்டும் என்கிற ஓரமின் இந்த முடிவை ஏற்றுக்கொள்கிறோம் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.