நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

நூலி​ழையி‌ல் நழு​விய வா‌ய்‌ப்பு: வெளி​யே​றி​யது இ‌ந்​தியா

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா கடைசி லீக் ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியைத் தழுவியது. 

News image
Updated On :28 மார்ச் 2022, 5:45 am IST

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா கடைசி லீக் ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியைத் தழுவியது. 

இதனால், அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து, போட்டியிலிருந்து வெளியேறியது இந்தியா. இந்தியா, 7 ஆட்டங்களில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 5-ஆம் இடம் பிடித்தது. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அரையிறுதியில் ஆடவுள்ளன. 

வென்றே தீர வேண்டிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது. அடுத்து தென்னாப்பிரிக்கா அதே ஓவர்களில் அதே 7 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் அடித்து வென்றது. 

இந்திய அணியின் பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா 71, கேப்டன் மிதாலி ராஜ் 68, ஷஃபாலி வர்மா 53, ஹர்மன்பிரீத் கெüர் 48 ரன்கள் விளாசி அணியை வலுவான நிலைக்கு கொண்டு வந்தனர். தென்னாப்பிரிக்க பெüலிங்கில் ஷப்னிம் இஸ்மாயில், மசாபடா கிளாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். 

பின்னர் தென்னாப்பிரிக்க இன்னிங்ஸில் லெüரா வோல்வார்டட் 80, லாரா குட்டால் 49 ரன்கள் அடித்து உதவ, இறுதி வரை ஆட்டமிழக்காத மிக்னான் டு பிரீஸ் 52 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழி நடத்தினார். பெüலிங், ஃபீல்டிங்கில் தடுமாறிய இந்திய அணியில் ராஜேஷ்வரி கெய்க்வாட், ஹர்மன்பிரீத் கெüர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். 

தலைகீழ் மாற்றம்: ஆட்டத்தின் கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்கா வெற்றிக்கு 7 ரன்கள் தேவை இருந்தது. அதில் தீப்தி சர்மா வீசிய 2-ஆவது பந்தில் திரிஷா ஷெட்டி ஆட்டமிழக்க, 5-ஆவது பந்தில் மிக்னான் அவுட்டானார். துரதிருஷ்டவசமாக அந்தப் பந்து "நோ பால்' ஆனதால், மிக்னான் கண்டம் தப்பியதுடன் தென்னாப்பிரிக்காவுக்கு கூடுதல் பந்தும், 1 ரன்னும் கிடைத்தது. இதனால் 2 பந்துகளில் 2 ரன்களே தேவை இருக்க, மிக்னான் ஆட்டத்தை முடித்து வைத்தார். 

இங்கிலாந்து வெற்றி: மற்றொரு ஆட்டத்தில் வங்கதேசத்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து, அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துகொண்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.