நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

இங்கிலாந்தை 3-வது டெஸ்டில் வீழ்த்தி தொடரை வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, டெஸ்ட் தொடரை 1-0 என வென்றுள்ளது.

News image

வெற்றி பெற்ற மே.இ. தீவுகள் அணி

Updated On :28 மார்ச் 2022, 10:05 am IST

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, டெஸ்ட் தொடரை 1-0 என வென்றுள்ளது.

கிரனடாவில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 89.4 ஓவர்களில் 204 ரன்கள் எடுத்தது. மே.இ. தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 116.3 ஓவர்களில் 297 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றது. இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸிலும் மோசமாக விளையாடி 64.2 ஓவர்களில் 120 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து மே.இ. தீவுகள் அணி வெற்றி பெற 28 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 4.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்து அந்த அணி வெற்றி பெற்றது.

இதையடுத்து டெஸ்ட் தொடரை 1-0 என வென்றது மே.இ. தீவுகள் அணி. ஆட்ட நாயகனாக ஜோஷுவா ட சில்வாவும் தொடர் நாயகனாக கேப்டன் கிரைக் பிராத்வெயிட்டும் தேர்வானார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.