75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

இங்கிலாந்தை 3-வது டெஸ்டில் வீழ்த்தி தொடரை வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, டெஸ்ட் தொடரை 1-0 என வென்றுள்ளது.

வெற்றி பெற்ற மே.இ. தீவுகள் அணி

Published On :6 பிப்ரவரி 2024, 6:15 pm IST

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, டெஸ்ட் தொடரை 1-0 என வென்றுள்ளது.

கிரனடாவில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 89.4 ஓவர்களில் 204 ரன்கள் எடுத்தது. மே.இ. தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 116.3 ஓவர்களில் 297 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றது. இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸிலும் மோசமாக விளையாடி 64.2 ஓவர்களில் 120 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து மே.இ. தீவுகள் அணி வெற்றி பெற 28 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 4.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்து அந்த அணி வெற்றி பெற்றது.

இதையடுத்து டெஸ்ட் தொடரை 1-0 என வென்றது மே.இ. தீவுகள் அணி. ஆட்ட நாயகனாக ஜோஷுவா ட சில்வாவும் தொடர் நாயகனாக கேப்டன் கிரைக் பிராத்வெயிட்டும் தேர்வானார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.