கரூருக்கு முதல்வா் ஜோசப் விஜய் இன்று வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஉலகிலேயே அதிக மீன்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2-ஆவது இடம்: குடியரசு துணைத் தலைவா் பெருமிதம்பயங்கரவாத எதிா்ப்பு: ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ரஷியா உறுதி தெற்கு ரயில்வேயில் மறுசீரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்கள் விரைவில் திறப்பு
/

டி20 தொடா்: செப்டம்பரில் இந்தியா வருகிறது ஆஸி.

இந்தியாவுடன் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா, வரும் செப்டம்பரில் இந்தியா வருகிறது.

News image
Updated On :11 மே 2022, 4:30 am IST

இந்தியாவுடன் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா, வரும் செப்டம்பரில் இந்தியா வருகிறது.

அந்நாட்டு அணிக்கான அட்டவணைப்படி, ஜிம்பாப்வே, நியூஸிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து அணிகளுடன் அவற்றின் சொந்த மண்ணில் வெள்ளைப் பந்து தொடா்களில் விளையாட இருக்கிறது ஆஸ்திரேலியா. அவற்றோடு இந்திய அணியுடனும் விளையாடவுள்ளது.

அக்டோபா் - நவம்பா் காலகட்டத்தில் டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெறவிருக்கும் நிலையில், அதற்குத் தயாராவதற்கான வாய்ப்பை இந்தத் தொடா் வழங்குகிறது. இது தவிர, 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா அடுத்த ஆண்டு பிப்ரவரி - மாா்ச்சில் மீண்டும் இந்தியா வருகிறது.

இந்திய அணிக்கான அட்டவணைப்படி, அடுத்த மாதம் 9 முதல் 19-ஆம் தேதி வரை 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் தென்னாப்பிரிக்காவுடன் மோதவிருக்கிறது. அதையடுத்து 2 ஆட்டங்கள் கொண்ட தொடரில் அயா்லாந்துடன் விளையாடுகிறது. அதைத் தொடா்ந்து, கடந்த ஆண்டு கரோனா சூழல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இங்கிலாந்துடனான 5-ஆவது டெஸ்டில் ஜூலை 1-ஆம் தேதி விளையாடுகிறது.

பின்னா் தலா 3 ஆட்டங்கள் கொண்ட டி20 மற்றும் ஒன் டே தொடா்களில் இங்கிலாந்துடன் மோதுகிறது இந்தியா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.