தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

உலக சாம்பியன் கார்ல்சனை மீண்டும் தோற்கடித்த தமிழக இளம் வீரர் பிரக்ஞானந்தா

மூன்று மாத இடைவெளியில் உலக செஸ் சாம்பியன் கார்ல்சனை மீண்டும் தோற்கடித்துள்ளார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா.

News image
Updated On :21 மே 2022, 6:12 am

DIN

மூன்று மாத இடைவெளியில் உலக செஸ் சாம்பியன் கார்ல்சனை மீண்டும் தோற்கடித்துள்ளார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா.

கடந்த பிப்ரவரி மாதம் இணையம் வழியாக நடைபெற்ற ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் எட்டாவது சுற்றில் உலகின் நெ.1 செஸ் வீரர் கார்ல்சனைத் தோற்கடித்துப் பரபரப்பை ஏற்படுத்தினார் தமிழகத்தைச் சேர்ந்த 16 வயது பிரக்ஞானந்தா. இதனால் அவருக்குப் பலத்த பாராட்டுகள் கிடைத்தன.

இந்நிலையில் கார்ல்சனை மீண்டும் தோற்கடித்து அசத்தியுள்ளார் பிரக்ஞானந்தா. இணையம் வழியாக நடைபெறும் செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் கார்ல்சனை எதிர்கொண்டார் பிரக்ஞானந்தா. 40-வது நகர்த்தல் வரை ஆட்டம் டிரா ஆவது போல இருந்தது. ஆனால் இதன்பிறகு கார்ல்சன் ஒரு தவறு செய்தார். அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெற்றார் பிரக்ஞானந்தா.

தற்போது 11-வது வகுப்புத் தேர்வுக்காகத் தயாராகி கொண்டிருக்கும் பிரக்ஞானந்தா இந்த வெற்றி கூறும்போது, என்னுடைய ஆட்டத்தின் தரம் பற்றி எனக்குத் திருப்தியில்லை. சில உத்திகளை நான் தவறவிட்டு விட்டேன். நாளை இன்னும் உஷாராக நான் விளையாட வேண்டும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.