இங்கிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ரோஹித் சர்மா தலைமையிலான அணியில் கே.எல்.ராகுல்(துணை கேப்டன்), சுப்மன் கில் இடம் பெற்றுள்ளனர். மேலும் விராத் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, புஜாரா, ரிஷப் பந்த், கே.எஸ்.பாரத், ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் அஸ்வின், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, பும்ரா, சிராஜ், உமேஷ் யாதவ், பிரசித் கிருஷ்ணா டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளனர். கரோனாவால் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் நடக்க உள்ளது.